Tuesday, February 11, 2025
Homeசினிமாஅஜித் படத்தில் இருந்து நீக்கம்.. மேடையில் தயாரிப்பாளரிடம் கோபமாக பேசிய டிஎஸ்பி

அஜித் படத்தில் இருந்து நீக்கம்.. மேடையில் தயாரிப்பாளரிடம் கோபமாக பேசிய டிஎஸ்பி


அஜித் அடுத்து நடித்து வரும் குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பாளராக இருந்த தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது அதில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேடையில் கோபமாக பேசிய டிஎஸ்பி


இன்று புஷ்பா 2 படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் புஷ்பா 2 படத்தை தயாரித்து இருக்கிறது.

மேடை ஏறிய டிஎஸ்பி கோபமாக தயாரிப்பாளர்களை பார்த்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

“சார்.. நான் மேடையில் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன் என சொல்லிடாதீங்க. நான் பாடல்களை சரியான நேரத்திற்கு கொடுப்பதில்லை என சொல்றீங்க. பின்னணி இசை சரியான நேரத்தில் கொடுப்பதில்லைனு சொல்றீங்க. நான் ஷோவுக்கு நேரத்திற்கு வர்றதில்லைனு சொல்றீங்க.”

“என் மீது உங்களுக்கு அதிக அன்பு இருக்கிறது. அதே நேரத்தில் புகார்களும் தான் அதிகம் வருகிறது” என டிஎஸ்பி பேசி இருக்கிறார்.  வீடியோவில் நீங்களே பாருங்க.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments