பிக் பாஸ் 8வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்தார்.
தற்போது மீண்டும் போட்டியாளர்களை வரவைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது.
அதில் முத்துகுமரனின் பெற்றோர் மற்றும் அவரது கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டனர். முத்துகுமரனின் வெற்றியை பற்றி அவர்கள் மகிழ்ச்சியாக பாராட்டி பேசினர்.
ட்ரோல் செய்தவர்களுக்கு பதில்
மேடையில் பேசும்போது தனது அப்பா சின்ன வயதில் இருந்தே கஷ்டப்படுகிறார் என முத்துக்குமரன் பேசினார்.
மேலும் அவருக்கு ஒரு நல்ல செருப்பு கூட வாங்கி தரவில்லையா என பலரும் என்னை ட்ரோல் செய்திருக்கின்றனர். அவருக்கு காலில் ஆணி இருக்கிறது.