Tuesday, February 11, 2025
Homeசினிமாஅல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்! சிறைக்கு அனுப்பபட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்! சிறைக்கு அனுப்பபட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி


புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தற்போது போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்து இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.

14 நாட்கள் நீதிமன்ற காவல்

போலீசார் அதன் பின் அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து இருக்கிறது. அதனால் அவர் சிறைக்கு அனுப்பப்பட இருக்கிறார்.

ஜாமீன் பெற அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர்கள் முயற்சித்தாலும், அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நீதிமன்றம் செயல்படாது. அதனால் திங்கள் அன்று தான் ஜாமீன் கோர முடியும். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments