Monday, March 17, 2025
Homeசினிமாஇனியா விஷயத்தில் கோபி செய்த செயல், வீட்டைவிட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா... யூடியூப் டிரெண்டிங்கில்...

இனியா விஷயத்தில் கோபி செய்த செயல், வீட்டைவிட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா… யூடியூப் டிரெண்டிங்கில் பாக்கியலட்சுமி புரொமோ


பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வார எபிசோடில் ஒரு பரபரப்பான விஷயம் நடந்தது.

அதாவது இனியா, செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கும் விஷயத்தை கோபி முதலில் தெரிந்துகொள்கிறார். அந்த விஷயத்தை வீட்டில் வந்து கூற அனைவருமே ஷாக் ஆகிறார்கள், இதில் பாக்கியா இன்னும் அதிர்ச்சி ஆகிறார்.

தனது மகனின் காதல் பற்றி எதுவும் தெரியாத செல்வி, பாக்கியா வீட்டிற்கு வர அனைவராலும் அவமானப்படுத்தப்படுகிறார். வீட்டை விட்டு வெளியே அனுப்பப் படுகிறார், ஆனால் பாக்கியா எதுவும் சொல்லவில்லை.

புரொமோ

தற்போது இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் செழியன் மற்றும் கோபி, செல்வி வீட்டிற்கு சென்று அவரது மகன் ஆகாஷை அடி அடி என அடிக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்த பாக்கியா வீட்டிற்கு வந்து செழியன் பேசியதற்கு அடிக்கிறார்.

பின் கோபியிடம், எனது பிள்ளைகளுக்காக தான் உங்களை வீட்டில் சேர்த்தேன், ஆனால் இனிமேல் உங்களுக்கு இங்கு இடம் இல்லை, வெளியே செல்லுங்கள் என்கிறார். இந்த புரொமோ யூடியூபில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments