Saturday, March 15, 2025
Homeசினிமாஇறப்பதற்கு முன் மனோபாலா சொன்ன அந்த வார்த்தை.. சுந்தர் சி வருத்தம்

இறப்பதற்கு முன் மனோபாலா சொன்ன அந்த வார்த்தை.. சுந்தர் சி வருத்தம்


சுந்தர் சி

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் தற்போது சில படங்கள் உள்ளன. இந்நிலையில், முன்பு அரண்மனை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மனோபாலா குறித்து சுந்தர் சி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுந்தர் சி வருத்தம்

அதில், ” அரண்மனை 4 படத்தில் மனோபாலா நடிக்காதது மிகப்பெரிய இழப்பு. இந்த படத்தில் அவருக்கென ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது.

ஆனால், அந்த நேரத்தில் மனோபாலாவிடம் இருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அதாவது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது.

இறப்பதற்கு முன் மனோபாலா சொன்ன அந்த வார்த்தை.. சுந்தர் சி வருத்தம் | Sundar C Share Some Emotions

எனவே இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது. எனக்கு பதிலாக அரண்மனை 4 படத்தில் வேறு ஒருத்தரை நடிக்க வைத்துக் கொள். நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்” என கூறியிருந்தார். இப்போது வரை அவர் கூறிய அந்த வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments