Monday, March 17, 2025
Homeசினிமாஇலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா

இலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா


பராசக்தி 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வா மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படகுக்கு இலங்கை செல்லப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இலங்கைக்கு சென்ற சிவகார்த்திகேயன்

இலங்கையில் யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா | Sivakarthikeyan Went To Srilanka For Shooting

இந்த நிலையில், இலங்கையில் நடக்கவிருக்கும் பராசக்தி படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவருடைய வீடியோ தற்போது ரசிகர்களுடைய வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments