Tuesday, March 18, 2025
Homeசினிமாசினிமாதுறை மீது அவ்ளோ வெறுப்பு.. நடிகர் அனுராக் கஷ்யப் எடுத்த அதிர்ச்சி முடிவு

சினிமாதுறை மீது அவ்ளோ வெறுப்பு.. நடிகர் அனுராக் கஷ்யப் எடுத்த அதிர்ச்சி முடிவு


இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் அனுராக் கஷ்யப்.

ஹிந்தியில் பிரபல இயக்குனரும் நடிகருமான அவர் தற்போது ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

மும்பையை விட்டே போகிறேன்

சினிமா துறையின் மீது தாம் வெறுப்படைந்து இருப்பதாகவும், அடுத்த வருடம் மும்பையை விட்டு போக போகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில் எதையும் புதிதாக experiment செய்ய முடியாது. ஒரு படம் தொடங்கும் முன்பே அதை எப்படி விற்க முடியும் என்று தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. அதனால் தயாரிப்பாளர்கள் லாபம், margin போன்ற விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டி இருக்கிறது.

மும்பையை விட்டு நான் தென்னிந்தியா பக்கம் போகிறேன். என்னுடைய சொந்த சினிமா துறை மீது ஏமாற்றம் மற்றும் வெறுப்பில் இருக்கிறேன்.

எல்லாம் ரீமேக்..

மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற ஒரு படத்தை ஹிந்தியில் எடுக்க மாட்டார்கள். அங்கே ஹிட் ஆனால், அதை கொண்டு வந்து ஹிந்தியில் ரீமேக் செய்வார்கள்.

எதையும் புதிதாக செய்ய மாட்டார்கள், எல்லாம் ரீமேக் தான் என அவர் கோபமாக பேட்டியில் பேசி இருக்கிறார். 

சினிமாதுறை மீது அவ்ளோ வெறுப்பு.. நடிகர் அனுராக் கஷ்யப் எடுத்த அதிர்ச்சி முடிவு | Anurag Kashyap Disgusted On Hindi Cinema

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments