Tuesday, February 11, 2025
Homeசினிமாசிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி.. ஆனால் கண்கலங்கிய அருண்!

சிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி.. ஆனால் கண்கலங்கிய அருண்!


பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இன்று வர்ஷினி எலிமினேட் செய்யப்பட்டார். வழக்கமாக கார்டை காட்டி எலிமினேஷனை அறிவிக்கும் விஜய் சேதுபதி, சில வாரங்களாக எலிமினேஷன் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

வாள் எடுத்து காட்டி எலிமினேஷனை அறிவிக்கும் வகையில் இன்றைய டாஸ்க் இருந்தது. அதில் வர்ஷினி எலிமினேட் செய்யப்பட்டார்.

அவர் இந்த முடிவால் கொஞ்சமும் கவலை படவில்லை. மகிழ்ச்சியாக எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினார்.


கண்கலங்கிய அருண்

குறிப்பாக போகும்முன்பு அவர் அருணிடம் தான் வரைந்து வந்த சில படங்களை கொடுத்தார் அவர்.

‘நான் வெளியில் வந்து வாங்கிக்கொள்கிறேன், உன்னை மிஸ் செய்வேன்’ என அருண் கூறுகிறார்.


மேலும் வர்ஷினி கடைசியாக ஒரு பாடலை பாடும்போது அருண் கண்களே கலங்கிவிட்டது. இதை அர்ச்சனா பார்த்தால் என்ன ஆகும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி.. ஆனால் கண்கலங்கிய அருண்! | Varshini Eliminated From Bigg Boss 8 Tamil

சிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி

அதன் பின் விஜய் சேதுபதி உடன் வர்ஷினி பேசும்போதும் தான் மகிழ்ச்சியாக தான் செல்வதாக கூறுகிறார். அவரும் ஆச்சர்யமாக ‘உங்களை போல ரொம்ப மகிழ்ச்சியாக யாரும் சென்றதில்லை’ என கூறுகிறார். 

சிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி.. ஆனால் கண்கலங்கிய அருண்! | Varshini Eliminated From Bigg Boss 8 Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments