Monday, February 17, 2025
Homeசினிமாஜெயம் ரவி விவாகரத்து வழக்கு.. நேரில் இருவரும் ஆஜர்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு.. நேரில் இருவரும் ஆஜர்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது


தமிழ் சினிமா துறையில் பிரபலங்களில் விவாகரத்து அறிவிப்புகள் தான் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனுஷ் – ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் – சாயிரா, ஜெயம் ரவி – ஆர்த்தி என தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் விவாகரத்து அறிவித்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதை அவரே அறிக்கையிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நேரில் ஆஜர்

நேற்று நடந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் ஆஜர் ஆனார்கள். அவர்கள் இருவரும் சமரச தீர்வு மையத்தில் அமர்ந்து பேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

அதை ஏற்று அவர்கள் இருவரும் சமரச தீர்வு மையத்திற்கு சென்று இருக்கின்றனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments