Monday, May 12, 2025
Homeஇலங்கைதர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை

தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை


2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியால் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை பயணப் பெட்டியில் அடைத்து கொழும்பில் உள்ள பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் கைவிட்டுச் செல்லப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜூலை 29, 2015 அன்று தர்மராஜா கார்த்திகா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிரதிவாதியான பெட்ரிக் கிருஷ்ணராஜா மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தீர்ப்பை அறிவித்து, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி என தெரிவித்திருந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

இருப்பினும், நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி பிரதிவாதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments