Monday, April 21, 2025
Homeஇலங்கைதிடீரென பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கையின் பங்குச் சந்தை

திடீரென பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கையின் பங்குச் சந்தை


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய நாள் நிறைவில் (07) (ASPI) 712.90 புள்ளிகள் சரிந்து (4.64%) 14,660.45 ஆக பதிவாகியுள்ளது.

S&P SL20 264.57 விலைச் சுட்டெண் 264.57 புள்ளிகள் சரிந்து 4,268.78 புள்ளிகளாக பதிவானது.

இது முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது பாரிய சரிவு என கூறப்படுகிறது.

கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.

வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதவாகியிருந்தன.

இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.4 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments