Saturday, February 15, 2025
Homeசினிமாநான் அழகிற்காக அதை செய்தேனா.. அதிரடி பதிலளித்த நடிகை நயன்தாரா

நான் அழகிற்காக அதை செய்தேனா.. அதிரடி பதிலளித்த நடிகை நயன்தாரா


நயன்தாரா 

ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா.

முதல் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.



கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அன்னபூரணி படம் வெளிவந்தது. தற்போது,  மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

அவ்வப்போது, அவரது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.

அவ்வாறு சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஒரு தரப்பினர் நயன்தாரா அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என கூறினர்.

நயன்தாரா பதில் 

தற்போது, இதற்கு பதிலளித்துள்ள நயன்தாரா, ” நான் முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது என்னுடைய புருவங்களை அழகு படுத்தி கொள்வேன்.

நான் அழகிற்காக அதை செய்தேனா.. அதிரடி பதிலளித்த நடிகை நயன்தாரா | Nayanthara Replied To Negative Comments

அவ்வாறு நான் செய்வது வழக்கமான ஒன்று. அதனால் மக்கள் நான் முகத்திற்கு ஏதோ செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், அது எதுவும் உண்மை இல்லை.


என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேநேரம் என்னுடைய கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன” என கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments