சிங்கப்பெண்ணே
பெண்களை மையப்படுத்திய கதைகள் சன் டிவியில் நிறைய ஒளிபரப்பாகி வருகிறது. அப்படிபட்ட தொடர்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.
புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்த தொடரின் கதை ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தியதாகும்.
கிராமத்தில் இருந்து தனது குடும்ப சூழ்நிலையால் பணம் சம்பாதிக்க சென்னை வரும் ஆனந்தியை சுற்றி நடக்கும், காதல், நட்பு, போராட்டம் என அனைத்தையும் பேசுவது போல் கதை உள்ளது.
புரொமோ
கதையில் ஆனந்தி பார்க்காமலேயே காதலித்த அழகன் யார் என்பதை அவர் அறியும் கதைக்களம் தற்போது வந்துள்ளது.
அன்புவை நேரில் சந்தித்து அழகன் இருக்கானா இல்லையா என ஆனந்தி கேட்க அவர் இல்லை என்கிறார். இதனால் கோபப்பட்ட ஆனந்தி அனைவர் முன்பும் அவரை அரைகிறார்.
இதோ பரபரப்பான புரொமோ,