Wednesday, March 26, 2025
Homeஇலங்கையாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்


யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

தேவை தேவைப்படுவோரிடம் நக்கல், நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து பதிவிட்டு வருபவர். அதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டிற்கு இரவு வேளை சென்ற குறித்த நபர், மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார்.

அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாளுகை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம், சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர்கள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் குறித்த சம்பவத்திற்கு சபையில் கண்டனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments