Monday, February 17, 2025
Homeசினிமாரஜினி சொன்ன வார்த்தை.. சீரியல் நடிகை கண்மணி நெகிழ்ச்சி

ரஜினி சொன்ன வார்த்தை.. சீரியல் நடிகை கண்மணி நெகிழ்ச்சி


பாரதி கண்ணம்மா உட்பட பல பாப்புலர் சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சமீபத்தில் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அஸ்வத் மற்றும் கண்மணி இருவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து இருக்கின்றனர்.

ரஜினி சொன்ன வார்த்தை..

சில தினங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்த போது கிடைத்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர் என்னை பார்த்து “கண்மணி.. நைஸ் நேம்” என சொன்னது என் இதயத்தில் எப்போதுமே இருக்கும் என கண்மணி கூறி இருக்கிறார்.

மேலும் அஸ்வத் சன் டிவியில் தொகுத்து வழங்கும் ஷோக்களையும் தான் பார்ப்பதாக ரஜினி கூறி பாராட்டினாராம். மேலும் திருமணத்திற்காக வாழ்த்து சொல்லி, ஆசீர்வதித்தாராம் ரஜினி.

கண்மணி நெகிழ்ச்சியாக போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவை நீங்களே பாருங்க. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments