Wednesday, March 26, 2025
Homeசினிமாரூ. 5 கோடி மானநஷ்டஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ரூ. 5 கோடி மானநஷ்டஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு


மானநஷ்டஈடு வழக்கு

Youtube சேனல்களில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மானநஷ்டஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட கோரியும், தன்னை பற்றி இனி அவதூறாக பேச கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணனையை மாஸ்டர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி, சாட்சியங்களை சமர்ப்பித்தார் நடிகர் வடிவேலு.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு



இதைத்தொடர்ந்து சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுடன் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதற்காக வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

ரூ. 5 கோடி மானநஷ்டஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Vadivelu 5 Crore Defamation Case Current Status

ஆனால், இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதாகவும், குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கே முறையிட்டு கொள்ளலாம் என கூற வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments