Monday, March 24, 2025
Homeசினிமாவிஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ

விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?… சிறகடிக்க ஆசை புரொமோ


சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது விஜயாவின் ரூ. 2 லட்சம் பணம் திருடு போனது விஷயம் தான் பரபரப்பாக செல்கிறது.

இன்றைய எபிசோடில் உண்மையை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வந்த முத்து கொஞ்சம் டுவிஸ்ட் வைத்து விஜயா பணம் வாங்கிய விஷயத்தை போட்டுடைக்கிறார்.

சத்யாவின் கேஸை வாபஸ் வாங்க விஜயா பணம் வாங்கிய விஷயத்தை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள். பின் அண்ணாமலை, விஜயாவை மன்னிப்பு கேட்ட கூறுகிறார், ஆனால் மறுக்கிறார்.

இதனால் முத்து மன்னிப்பு கேட்ட வேண்டாம், இனி அம்மா மீனாவை திருடி திருட்டு குடும்பம் என சொல்லக் கூடாது, அப்படி கூறினால் இருக்கிறது என கோபமாக கூறுகிறார்.


நாளைய புரொமோ

இன்றைய எபிசோட் பரபரப்பாக செல்ல நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், மனோஜ் விஜயாவிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம் விடுங்கள் என கூறுகிறார்.

உடனே விஜயா, அப்பாவை சொன்னதற்கு எல்லாம் கவலை இல்லை, ஆனால் ஒரு பூகாரியிடம் கடனாளியாக இருப்பது தான் ஒரு மாதிரி உள்ளது என கூறுகிறார்.

இதற்கு ஒரு வழி என்றால் உடனே மலேசியாவிற்கு டிக்கெட் போடு என்கிறார் விஜயா, இதைக்கேட்டு ரோஹினி செம ஷாக். தற்போது இதில் இருந்து ரோஹினி எப்படி தப்பிக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments