கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.
பல்வேறு அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்திகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.