பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப, இன்றும் (16) பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று பேருந்துகள் வழக்கமான அட்டவணையின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை இயக்குநர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
தங்கள் ஊர்களுக்குச் சென்ற பயணிகளுக்காக நாளை (17) முதல் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அலுவலக ரயில்களை வழக்கம்போல் இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதன்படி,கொழும்பு திரும்பும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாளை (17) முதல் பல சிறப்பு ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.