Thursday, March 13, 2025
Homeசினிமாவிஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புதிய நிகழ்ச்சி.. தொகுப்பாளர் யார் தெரியுமா

விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புதிய நிகழ்ச்சி.. தொகுப்பாளர் யார் தெரியுமா


விஜய் டிவி

சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. ஸ்டார்ட் ம்யூசிக், பிக் பாஸ், அது இது எது, நீயா நானா என பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கியுள்ளது.


இதில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிகழ்ச்சி

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர்.

ஆம், விஜய் தொலைக்காட்சியில் புதிதாக கம்பெனி எனும் புதிய நிகழ்ச்சி வரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புதிய நிகழ்ச்சி.. தொகுப்பாளர் யார் தெரியுமா | Vijay Tv Going To Launch New Show

மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments