Tuesday, October 22, 2024
Homeசினிமாலெஜண்ட் சரவணனின் புதிய படம் இப்படியொரு கதைக்கத்தில் உருவாகிறதா! இயக்குனர் கூறிய தகவல்

லெஜண்ட் சரவணனின் புதிய படம் இப்படியொரு கதைக்கத்தில் உருவாகிறதா! இயக்குனர் கூறிய தகவல்


லெஜண்ட் சரவணன்

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.



முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது. இதை தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார். அதுவும் ஆளே டோட்டலாக மாறிப்போய் வித்தியமான லுக்கில் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.



துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியது. கருடன் படத்தின் மாபிறேம் வெற்றிக்கு பின் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார் துரை செந்தில் குமார்.

இப்படியொரு கதைக்களம்


இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் துறை செந்தில்குமார் அளித்த பேட்டி ஒன்றில் லெஜண்ட் சரவணன் படம் குறித்து பேசியுள்ளார்.

இதில் “லெஜண்ட் சரவணனுடன் நான் பண்ணும் திரைப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறது” கருடன் படத்தை முடித்துவிட்டு இப்படத்திற்காக கதையை அவரிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. ஒரு நடிகரை விட அருமையான திரைக்கதை மிகவும் அவசியம் என கருடன் மற்றும் மகாராஜா ஆகிய படங்கள் நிரூபித்துள்ளது” என கூறியுள்ளார்.

லெஜண்ட் சரவணனின் புதிய படம் இப்படியொரு கதைக்கத்தில் உருவாகிறதா! இயக்குனர் கூறிய தகவல் | Durai Senthil Kumar About Legend Movie

ஆகையால் துரை செந்தில்குமார் – லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments