நடிகர் நாகர்ஜூனா சில தினங்களுக்கு முன்பு ஏர்போர்ட் வந்தபோது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரல் ஆனது. நடிகர் தனுஷும் நாகார்ஜூனாவுக்கு பின்னால் நடந்து வந்த நிலையில், அந்த சம்பவத்தை பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.
இது பெரிய சர்ச்சை ஆனதை தொடர்ந்து நாகார்ஜூனா மன்னிப்பு கோரி இருந்தார். இதுபோல இனிமேல் நடக்காது என கூறி இருந்தார் அவர்.
பீச்சில் தனுஷ்.. ரசிகர்களை தள்ளிவிட்ட காவலர்
இந்நிலையில் தனுஷ் இன்று ஜுஹு பீச்சில் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது ரசிகர்கள் சிலர் போனில் அவரை போட்டோ எடுக்க முற்பட்டு இருக்கின்றனர்.
அவர்களை தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதாக வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நெட்டிசன்களும் தனுஷை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
பொது இடத்தில் ஷூட்டிங் நடக்கும்போது மக்களை இப்படி தான் நடத்துவீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.